சேலம்: சேலம் அருகே நேற்று ரயில் பாதையிலுள்ள மின்கம்பி அறுந்து விழுந்து, ஈரோடு பாசஞ்சர் ரயிலில் பயணித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை - ஈரோடு இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் நேற்று மாலை 4 மணியளவில், சேலம் அருகேயுள்ள ஊத்தங்கரை அடுத்த வேலம்பட்டி என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் இயக்கத்திற்கு மின் சப்ைள கொடுத்து வந்த உயர் அழுத்த மின்கம்பி அறுந்து ரயில்வே பாதையையொட்டி விழுந்தது. அந்த நேரம் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.