ஸ்ரீநகர்: காஷ்மீரில் வாலிபர் ஒருவரை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பண்டிப்புரா மாவட்டத்தில் உள்ள கண்டாபிரிங் கிராமத்தில் முகமது யாகூப் என்பவரை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். நேற்று காலை அவரது சடலத்தை போலீசார் மீட்டனர். வாலிபரை தீவிரவாதிகள் கொடூரமாக கொன்றதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.