சென்னை: பி.இ. மற்றும் பி.டெக் படிப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறையை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகமும் ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நடப்பாண்டு ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர்கல்வித்துறை ஆணை ஒன்று பிறப்பித்தது. அதன்படி நடப்பாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.