சென்னை: காவிரி நதிநீர் பிரச்னைகள் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிந்து வைத்திருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று காலை, சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் நன்றாக உணர்ந்தவர். குறிப்பாக காவிரி நதிநீர் பிரச்னைகள் குறித்து, அவர் மிக தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்.