காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில்60பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் 18 பேர் உயிரிழந்தனர்.