சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கள ஆய்வு நடத்தினார். இன்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 65 மாவட்டங்களில் மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார். இதுவரை 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கான கள ஆய்வு நிறைவடைந்துள்ளது. 2ம் கட்டமாக திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு கிருஷ்ணகிரி மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான கள ஆய்வை தொடர்ந்து நேற்று மாலை 3 மணிக்கு சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடைபெற்றது.