சென்னை: பாஜவும், அதிமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி இல்லை என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பாஜ கூட்டணியில் அதிமுக இடம் பெற வேண்டும் என்று கூறியிருப்பதற்கு, தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் நான் கூற முடியாது. தேர்தல் ேநரத்தில் கூட்டணி பற்றி, கட்சியின் தலைமை முடிவு செய்யும். இப்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை, நாடாளுமன்றத்தில் தனித்துதான் செயல்பட்டு வருகிறோம்.