1000 ஆண்டு பழமையான 14 மம்மிகள் பெரு நாட்டில் கண்டுபிடிப்பு..!!

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் இறந்து பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தலைநகர் லிமாவிற்கு அருகில் காஜாமார்க்கில்லா என்ற பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது ஒரு இடத்தில் மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட 14 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 குழந்தைகள் என்றும், 2 பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டு பாரம்பரியப்படி இறந்தவர்கள் வாழ்க்கை அதோடு முடிவதில்லை என்றும் அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பிறந்து வாழ்க்கையை தொடர்வார்கள் எனவும் நம்பப்படுகிறது.

The post 1000 ஆண்டு பழமையான 14 மம்மிகள் பெரு நாட்டில் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: