எரிபொருள் விலை உயர்வு!: சிலிண்டர், வாகனங்களுக்கு மாலை அணிவித்து ராகுல் தலைமையில் காங்., எம்.பி.க்கள் போராட்டம்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் தலைமையில் டெல்லியில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி அறிவித்தது. அதன்படி, டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் காங்., எம்.பி., ராகுல் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஆதிர் ரஞ்சன், மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட காங்., மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

The post எரிபொருள் விலை உயர்வு!: சிலிண்டர், வாகனங்களுக்கு மாலை அணிவித்து ராகுல் தலைமையில் காங்., எம்.பி.க்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: