6 குற்ற வழக்குகளை மறைத்த மம்தா வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: சுவேந்து அதிகாரி அதிரடி

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜவில் சேர்ந்தவர் சுவேந்து அதிகாரி. முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை  சந்தித்த சுவேந்து அதிகாரி, ‘‘மம்தா பானர்ஜி தனது பிரமாண பத்திரத்தில் அவருக்கு எதிராக 6 வழக்குகள் விசாரணையில் உள்ளது என்பதை மறைத்துள்ளார். ஒன்று சிபிஐ வழக்கு மற்றும் அசாமில் 5 வழக்குகளும் உள்ளன. தேர்தல் ஆணையம்  உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்ைக எடுக்கிறது என பொறுத்திருந்து பார்க்கிறேன். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றப்பின்னணியை மறைத்தற்காக அவரது வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட வேண்டும்” என்றார். …

The post 6 குற்ற வழக்குகளை மறைத்த மம்தா வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: சுவேந்து அதிகாரி அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: