லக்னோ: நாட்டிலேயே முதல் முறையாக, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 1,000 சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. உ.பி.,யில் பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாத, 1,000 சட்டங்களை, உ.பி., அரசு பட்டியலிட்டுஉள்ளது. இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்த மசோதா மூலம், ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உ.பி., மாநில சட்ட அமைச்சர், பிரிஜேஷ் பதக், நிருபர்களிடம் கூறியதாவது: பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட பல சட்டங்கள் தற்போதைய காலத்துக்கு பொருந்தாதவையாக மாறியுள்ளன. இத்தகைய சட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம்.