- சென்னை
- எம்.எஸ். மூர்த்தி
- மித்ரா படங்கள்
- சபரி
- ரோஹிந்த்
- ரக்ஷிதா மகாலட்சுமி
- ஸ்வேதா
- பவன் கிருஷ்ணா
- K.R விஜயா
- கே.எஸ். வெங்கடேஷ்
- எஸ். சினேகா
- குமாரி கனிஷ்கா
- பி.எல். தேனப்பன்
- செவிலோ ராஜா
- மீனாட்சி
சென்னை: மித்ரா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் ‘99/66 – தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு’. இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, பி.எல்.தேனப்பன் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கவனிக்கிறார். படம் பற்றி எம்.எஸ்.மூர்த்தி கூறியது: ஒரு குடியிருப்பில் நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் குடியிருப்பு வாசிகளை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. அவை ஏன் நடைபெறுகின்றன? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதை ஹாரர் கலந்து குடும்பத்தோடு பார்க்க கூடிய சுவாரஸ்யமான திரைக்கதையில் படமாக்கியுள்ளோம். மார்ச் 6ல் படம் தியேட்டர்களில் ரிலீசாகிறது.
