இன்று குறைந்தது கொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,985 பேர் பாதிப்பு; 1,908 பேர் குணம்: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.19கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.27 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,985பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,148பேர் ஆண்கள், 837பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 71ஆயிரத்து 383ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20ஆயிரத்து 185ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 283 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 30பேர் உயிரிழந்துள்ளார். 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 27 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 260ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,908பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 16 ஆயிரத்து 938ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது….

The post இன்று குறைந்தது கொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 1,985 பேர் பாதிப்பு; 1,908 பேர் குணம்: சுகாதாரத்துறை அறிக்கை..! appeared first on Dinakaran.

Related Stories: