சென்னை பூதூர் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி வாலிபர் பலி Jul 27, 2021 புத்தூர் ஏரி புத்தூர் ஏரி சேரன் தெரு செங்குன்ராம் தீர்த்தமகாரையம்பட்டு பூதூர் ஏரி புழல்: பூதூர் ஏரியில் குளித்த வாலிபர் சேற்றில் சிக்கி பரிதாபமாக பலியானார். செங்குன்றம் அடுத்த தீர்த்தம்கரையம்பட்டு சேரன் தெருவை சேர்ந்தவர் ராகுல்(21). இவரது நண்பர்கள் 5 பேருடன் சோழவரம் அடுத்த பூதூர் ஏரிக்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். அங்கு மணல் எடுத்த பள்ளத்தில் தேங்கிய தண்ணீர் இருந்தது. அதில் குளிக்கச் சென்றனர். அப்போது, அங்கு இருந்த சேற்றில் ராகுல் சிக்கி போராடினார். இதனை கண்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெகு நேரம் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடனே அவருடன் இருந்த நண்பர்கள் சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். … The post பூதூர் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயர் வைக்க வேண்டும்: முதல்வரிடம் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்படும் சென்னை வள்ளுவர் கோட்டம் ஜனவரி இறுதியில் திறக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வந்த செய்தி தவறானது: பூங்கா இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
கடந்த 9 ஆண்டுகளாக உயர்த்தப்படாத போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: ரயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்