சென்னை பூதூர் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி வாலிபர் பலி Jul 27, 2021 புத்தூர் ஏரி புத்தூர் ஏரி சேரன் தெரு செங்குன்ராம் தீர்த்தமகாரையம்பட்டு பூதூர் ஏரி புழல்: பூதூர் ஏரியில் குளித்த வாலிபர் சேற்றில் சிக்கி பரிதாபமாக பலியானார். செங்குன்றம் அடுத்த தீர்த்தம்கரையம்பட்டு சேரன் தெருவை சேர்ந்தவர் ராகுல்(21). இவரது நண்பர்கள் 5 பேருடன் சோழவரம் அடுத்த பூதூர் ஏரிக்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். அங்கு மணல் எடுத்த பள்ளத்தில் தேங்கிய தண்ணீர் இருந்தது. அதில் குளிக்கச் சென்றனர். அப்போது, அங்கு இருந்த சேற்றில் ராகுல் சிக்கி போராடினார். இதனை கண்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெகு நேரம் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடனே அவருடன் இருந்த நண்பர்கள் சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். … The post பூதூர் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.
தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர் திட்டம் குறித்து மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புரிந்துணர்வு பயிற்சி தொடக்கம்: மேயர் பிரியா கையேட்டை வெளியிட்டார்
மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை விபத்தில் 2 பேர் பலி ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட டிரைவர்கள் உள்பட 7 பேர் கைது: ஆட்டோக்கள் பறிமுதல்
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு மாலையுடன் நடனமாடியபடி வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்: ♦ நுழைவாயிலை இழுத்து பூட்டினார் முதல்வர்♦ 4 பேர் கத்திகளுடன் கைது
நாய் கடித்த சிறுவனிடம் நலம் விசாரிப்பு; ரேபிஸ் பாதிப்புள்ளதா என ஆய்வு மாடுகளை வளர்க்க மாநகராட்சி சார்பில் மாட்டு தொழுவம் அமைக்க நடவடிக்கை: மேயர் பிரியா பேட்டி
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு பாதுகாப்பிற்கு சிறப்பு சிகிச்சை மையம்: அப்போலோ மருத்துவமனை தொடங்கியது
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு
கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் கிடைக்காததால் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகள் தாமதம்: அதிகாரிகள் தகவல்