4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா கடைசியாக சிங்கம் 3 படத்தில் நடித்தார். அதுதான் அவர் தமிழி்ல் கடைசியாக நடித்த நேரடி படம் அதன்பிறகு பாகுபலி, பாகமதி, சைலண்ட் படங்கள் பிறமொழி மூலமாக தமிழுக்கு வந்தவை. காதல், கல்யாணம் என்று தொடர்ந்து அவரை பற்றி தகவல்கள் பரவிக் கொண்டிருந்தாலும் சினிமா வாய்ப்புகள் இல்லை.

இந்த நிலையில் அவர் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்கிறார்கள். தற்போது எடை கூடியிருக்கும் அவர் இந்த படத்திற்கா எடை குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: