கொல்கத்தா: பெங்காலி நடிகை அருணிமா கோஷூக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை மேற்குவங்க போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பெங்காலி நடிகை அருணிமா கோஷ், லால்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கர்பா பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக வாலிபர் ஒருவர் நடிகை அருணிமா கோஷை மிரட்டி வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபர், நடிகையின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார். அந்த வாலிபருக்கும், நடிகைக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம்.