×

பலாத்கார புகார் அளித்த நிலையில் கணவருடன் மீண்டும் சேர்ந்தார் நடிகை பூனம்

இந்தி நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரை கடந்த 3 வருடமாக காதலித்து வந்தார். கடந்த செப்டம்பர் 10ம் தேதி இவர்களின் திருமணம் மும்பையில் நடந்தது. இதையடுத்து தம்பதி இருவரும் கோவாவுக்கு சென்றனர். அங்கு சாம் பாம்பே தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் பலாத்காரம் செய்ததாகவும் பூனம் பாண்டே, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பே கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, சாம் பாம்பேவுடன் மீண்டும் இணைந்துள்ளார் பூனம் பாண்டே. இது பற்றி அவர் கூறும்போது, ‘நானும் சாமும் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம். எங்களுக்குள் பிரச்னை வந்தது உண்மைதான். இப்போது பேசி தீர்த்துக் கொண்டோம். எந்த திருமணத்தில்தான் பிர ச்னை இல்லாமல் இருக்கிறது’ என்றார்.

Tags : Poonam ,
× RELATED தடயவியல் பரிசோதனையின் மூலமாக தேர்தல்...