×

சிரித்தபடிதான் கோபப்பட்டேன்: நடிகை தந்த விளக்கம்

நடிகை கேத்ரின் தெரசா பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது அவரிடம் சீனியர் நடிகர் என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்கப்போகிறீர்களா என்று கேட்டதற்கு, இதற்கு பதில் சொல்ல வேண்டிய ஆள் நான் இல்லை. இதுபோல் என்னிடம் கேட்காதீர்கள். இயக்குனர் அல்லது தயாரிப்பாளரை போய் கேளுங்கள் என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

கேத்ரின் தெரசாக கோபமாக பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சமந்தப்பட்ட நடிகரின் காதுக்கும் இந்த தகவல் சென்றது. இந்நிலையில் கேத்ரின் அளித்துள்ள விளக்கத்தில்,’ என்னிடம் கேள்வி கேட்டபோது இதுபற்றி இயக்குனர் அல்லது தயாரிப்பாளரிடம் ேளுங்கள் என்றுதான் கூறினேன். சிரித்தபடிதான் இதை தெரிவித்தேன். அப்படி சொன்னதில் என்ன முரட்டுத்தனம் அல்லது  கோபம் இருக்கிறது’ என கேட்டிருக்கிறார்.

Tags : actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...