சென்னை: தெலுங்கில் வெளியான உப்பென்னா படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. அதன்பிறகு ஷியாம் சிங்கா ராய், பங்கார்ராஜூ, தி வாரியர் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தில் நடிதது வருகிறார். தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சினிமாவுக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து ‘நிஷ்ணா’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: நேற்றுதான் தொடங்கியதை போன்று இருக்கிறது எனது சினிமா பயணம், அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. எனது வாழ்க்கை பயணத்தில் புதிய அங்கமாக நிஷ்ணா என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறேன். நிஷ்ணா என்பது எனது பெற்றோர்களின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்ட சொல். இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் என்னால் இயன்ற உதவிகளை எது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் செய்ய இருக்கிறேன். இதற்கு உங்களின் வழிகாட்டுதலும், ஆதரவும் வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.