வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா சவேரி. வாலிப்பான உடற்கட்டும், சிக்கென்ற இடையுடன் அழகிய தோற்றமும் கொண்டிருந்ததால் ஜுனியர் திரிஷா என்று அவரை அழைத்தனர். திரைக்கு வந்த வேகத்தில் இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் வாசனையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்தார். ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் ஆஷ்னாவுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இதையடுத்து அடல்ட் காமெடி படத்தில் நடிக்க துணிந்தார். விமல் ஜோடியாக இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார் ஆஷ்னா.
ஆனால் அப்படத்துக்கு எதிர்ப்புதான் கிளம்பியது. கவர்ச்சி காட்டியும் பயனில்லாமல்போனதால் சோகத்தில் மூழ்கினார் ஆஷ்னா. தற்போது சமூக அக்கறையில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். உலகம் முழுவதும் சுற்றுப்புற சூழலால் சீதோஷண நிலைகள் மாறி வருவதாக பேசப்பட்டு வருவதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது,’உலகத்தில் சீதோஷண மாற்றங்கள் தற்போது நடந்துகொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இது இன்றைக்கோ அல்லது எதிர்காலத்திலோ பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதை தடுப்பதற்கான செயலில் நாம் தீவிரமாக ஈடுபட வேண்டும். மரம் நடுவதுபோன்ற சிறிய பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் நாம் தங்குவதற்கு வேறு உலகம் கிடையாது. பிளாஸ்டிக்கை ஒழியுங்கள், சக்தியை அளவோடு பயன்படுத்துங்கள், சூழ்நிலைக்கு ஏற்ப உணவு சாப்பிட வேண்டும், அதிகமாக மரங்கள் நட வேண்டும். இவ்வாறு ஆஷ்னா கூறினார்.