விமல் நாயகனாக நடிக்கும் ’சண்டக்காரி’ படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இதன் படப்பிடிப்பு லண்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆர் மாதேஷ் இயக்குகிறார். லண்டன் விமான நிலையத்தில் காட்சி படமாக்கப் பட்டபோது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை தாண்டிச் சென்றார் ஸ்ரேயா. உடனே போலீசார் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். குடியுரிமை பகுதியை ஏன் தாண்டினீர்கள் என துருவி துருவி விசாரணை நடத்தினர்.