சென்னை போரூரில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் புதிய ஷோரூம்: கணபதி எம்எல்ஏ திறந்து வைத்தார்

சென்னை: சென்னை போரூரில், மவுன்ட் பூந்தமல்லி சாலையில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நகைக் கடையின் புதிய ஷோரூமை மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனம், 10 நாடுகளில் 280 சில்லரை விற்பனை நிலையங்களுடன் செயல்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், ராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 19 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை போரூரில் மவுன்ட் பூந்தமல்லி சாலையில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் தமிழகத்தில் 19வது புதிய ஷோரூமை மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி நேற்று திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.அதிகமான இட வசதி, எண்ணற்ற மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி நகைகளின் தொகுப்புகள், கலை நயமிக்க அணிகலன்கள், பாரம்பரிய நகைகள் உள்பட ஏராளமான நகைகள் ஷோரூமில் இடம்பெற்றுள்ளது.  மேலும், வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா நகைகள், விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட பிரீசியா நகைகள், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட எத்தினிக் நகைகள், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் டிவைன், குழந்தைகளுக்கான ஸ்டார்லெட் நகை தொகுப்பு போன்றவை விற்பனைக்கு உள்ளன. வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு ஆயுட்கால பராமரிப்புடன், திரும்ப பெற்றுக் கொள்ளும் உத்தரவாதத்துடன் நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நிகழ்ச்சியில் மலபார் கோல்டு இந்தியா நிர்வாக இயக்குனர் (செயல்பாடுகள்) ஓ. அஷர், சில்லரை விற்பனை தலைவர் பி.கே.சிராஜ், தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், மண்டல வணிக தலைவர் சபீர் அலி, வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, மேற்கு மண்டல தலைவர் நவுசாத், தெற்கு மண்டல தலைவர் சுதீர் அகமது, போரூர் கிளை இணை தலைவர் சுஹைல் மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள், கிளை ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்….

The post சென்னை போரூரில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் புதிய ஷோரூம்: கணபதி எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: