பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை; சூட்கேசில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு: டெல்லியில் பரபரபப்பு

குர்கான்: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை கொன்று நிர்வாண நிலையில் சூட்கேசில் அடைத்து தூக்கி வீசிவிட்டு சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தலைநகர் டெல்லியின் குர்கான் அடுத்த இஃப்கோ சவுக் அருகே சாலையோர புதர்களில்,  சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் ஒன்று கிடப்பதை ஆட்டோ டிரைவர் ஒருவர் பார்த்தார். அந்த மர்ம சூட்கேஸ் குறித்து டெல்லி போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த சூட்கேசை கைப்பற்றினர். அதனை திறந்து பார்த்த போது, அதனுள் நிர்வாண நிலையில் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீஸ் டிசிபி தீபக் சஹாரன் கூறுகையில், ‘சூட்கேசில் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் கண்டறியப்பட்டது. அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்ததற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ குழுவினர் கூறினர். அந்தப் பெண் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் இடுப்பில் தீக்காயங்கள் போன்ற சில அடையாளங்கள் காணப்படுகின்றன. அந்தப் பெண்ணின் பிறப்புறுப்புகளிலும் காயங்கள் உள்ளன. சூட்கேஸ் கிடந்த இடத்தை சுற்றிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் யார், அவரைக் கொன்றது யார்? என்பதைக் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்….

The post பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை; சூட்கேசில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு: டெல்லியில் பரபரபப்பு appeared first on Dinakaran.

Related Stories: