கடற்கரையில் காதல் சிக்னல்: அமலா தூது

புறா விடு தூது கேள்விப்பட்டிருக்கிறோம்... அமலாபால் கடற்கரை காற்றை காதல் தூது விட்டிருக்கிறார். விவாகரத்துக்கு பின் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால். ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்தபோது அமலாவுக் கும். விஷ்ணுவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை விஷ்ணு விஷால் உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டார். அமலாபால் காதல் பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் நடிப்பிலேயே கவனமாக இருக்கிறார். ஷூட்டிங்கில் விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் கவர்ச்சி படங்களை வெளியிட்டு டிரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக சினேகம் என்று மலையாளத்தில் எழுதி அந்த படத்தை வெளி யிட்டிருக்கிறார். அமலா பால் யாருக்கு காதல் சிக்னல் காட்டுகிறார் என நெட்டிஸன்கள் வலைபோட்டு காதலனை தேடிக்கெண்டிருக்கின்றனர்.

Related Stories: