பீகார் வாலிபர் திடீர் தற்கொலை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் வசிப்பவர் சந்தீப் (35). இவர், ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் பீகாரை சேர்ந்த டூலார்சந்த் சவுப்பால் (20) வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார். அதே வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்கியுள்ளார். இந்நிலையில் டூலார்சந்த் காலையில் எழுந்து வராததால், அவர் தங்கியிருந்த அறையின் கதவை சந்தீப்பின் தாய் தட்டியுள்ளார். பலமுறை தட்டியும், திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது அங்கு டூலார்சந்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின்படி, ஆதம்பாக்கம் எஸ்ஐ முருகராஜ் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்….

The post பீகார் வாலிபர் திடீர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: