ஜூலனுக்காக தொடரை வெல்வோம்: ஸ்மிருதி மந்தனா பேட்டி

ஹோவ்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி.20 தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் முதல்ஆட்டம் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா, 99 பந்தில், 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 91ரன் எடுத்து கேட்ச் ஆனார்.  44.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 232ரன் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார். அவர் கூறுகையில், கடைசி வரை நாட்அவுட்டில் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.  ஒருநாள் போட்டி எனக்கு இயல்பானவை, டி.20ல் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். ஜூலன் கோஸ்வாமி சிறப்பாக பந்துவீசினார். கடைசி தொடரில் ஆடும் அவருக்காக தொடரை வெல்ல விரும்புகிறேன்,ஆட்டநாயகி விருதை அவருக்கு அர்ப்பணிக்கிறேன், என்றார். …

The post ஜூலனுக்காக தொடரை வெல்வோம்: ஸ்மிருதி மந்தனா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: