சென்னை: 10 நாட்களுக்கு பின் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மழை குறைந்து வரத்து அதிகரித்ததால் தக்காளியின் விலை சற்று குறைந்து கிலோ ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்கப்படுகிறது. வரத்து அதிகரித்தல் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்….
The post 10 நாட்களுக்கு பின் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சரிவு appeared first on Dinakaran.