புதுச்சேரியில் மதுபான ஆலை ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரியில் அமைச்சர் அலுவலகங்கள் ஊழல் ஏஜெண்டுகளின் அலுவலகமாக மாறிவிட்டது. மதுபான தயாரிப்பு தொழிற்சாலைக்கு உரிமம் கொடுத்ததில் வெளிப்படை தன்மை இல்லை. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுகொள்கையை மாற்றி அமைத்தற்காக சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் என அம்மாநில கவர்னர் கூறுகிறார். புதுச்சேரியில் மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக பாஜக எம்எல்ஏவே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். இவ்விவகாரத்தில் புதுவை கவர்னர் தமிழிசை வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்….

The post புதுச்சேரியில் மதுபான ஆலை ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: