எல்லம்மா கண் பார்த்தா
மண்கூட எருவாகும்
செல்லியம்மா மனசுவச்சாபயிரெல்லாம் வரவாகும்
பசுமை தொட்டில் கட்டிகன்றுகளை தாலாட்டும்காலில் கொலுசு கட்டியகோமாதா நடை நடனமாகும்குழந்தை மனம் போல பால் கறக்கும்!குறுமிளகு நீ தந்தா உன்குறையாவும் தீர்த்திடுவாள்உப்பு காணிக்கை வாங்கிதப்பெல்லாம் கரைத்திடுவாள்வெக்காளியம்மன் அருளாலேவெட்டுக்கிளிகள் திசைமாறும்வேண்டியதை அவள் கொடுப்பாமாவிளக்கு நீ போடு!பச்சையம்மா பந்திபோட்டாபாம்பு எலி உறவாகும்மயிலும் குயிலும் சேர்ந்துமடியில் வந்து நலம் கேட்கும்!கன்னியம்மா கண்மணிநிலக்கடலை விதையாகும்பனித்துளி நெல்மணியாகும்மழைத்துளி மண்ணில் வந்துமக்காச்சோளமாக மாறும்மண்புழுவும் தோழனாகும்!கவலையின்னா என்னகடலில் வாழும் மிருகமாஎங்க மனசுல அதுகுடியேற நாங்க விடுவமா!கடலம்மா அனுமதியோடுகரையோரம் பயிர் செய்வோம்!அலைநீரை அணைபோட்டுவயலுக்கு பாய்ச்சுவோம்வெள்ளையம்மா வீரத்தால்வெள்ளநீர் வெல்லமாகும்உள்ளங்கள் கொண்டாடும்சொர்க்கமடா எங்க பூமிபள்ளத்தில் பாடுபட்டு நாங்கபாருக்கு படி அளப்போம்!பராசக்தி தலைமை வகிக்கும்பட்டிக்காடு பல்கலைக்கூடம்விவசாய தேவதைக்கு படையல் போட்டாவிளைச்சலும் வாழ்வும் அமோகம்!
தொகுப்பு: விஷ்ணுதாசன்