அம்பிகை ஆணையிட்டால் இந்த
அகிலம் அடுத்தநிலைக்கு உயரும்
அல்லிவிழிமணிகள் உருட்டினால்ஆசையில் உயிரினங்கள் வளரும்
அருட்கரம் நீட்டினால் அலைகடல்அமைதியாகி அடங்கி ஒடுங்கும்அச்சத்தில் மனம் பதைப்பதேன்அம்பிகை திருவடியை பணிந்துவிடு!சுகந்தம் வீசும் தென்றல் தழுவவசந்த நவராத்திரி பிறந்ததுவைகை பொங்கியெழ மீனாட்சிவரங்கள் தரும் திருவிழாவெம்மை கிருமிகள் பரவாதுவெயில், அனல் தாக்காதுபக்தர்கள் நலனில் உறவாடிபக்கம் சேர்ப்பாள் நலம்கோடி!சியாமளா தேவியின் அருளால்சிகரம் தொடும் பக்திசாதனைசிட்டுக்குருவியாய் மனம் சிறகடிக்கும்சிங்கார முகம் தெளிவாகும்சீறிப்படமெடுக்கும் அரவம்சித்தரை கண்டு அமைதியாகும்சிந்தனையில் வசந்தம் வீசும்சித்தாந்தம் மவுனம் பேசும்!மலைமுகடில் அருவி பிறந்துமாலை சூட்டும் நிலத்துக்குமாதங்கியின் நெய்கூந்தல் கலைந்துமழை பெய்யும் கோடையில்மன்னரின் தர்மம் தழைத்துமக்கள் மகிழ்வர் நீரோடையில்மண்குடிசை பொன்மாளிகையும்மாற்றம் காணும் சக்திபார்வையில்!கருணை மனம் அருள்விழிகள்காதல்மொழி கனியின் சுவைகண்டோர் வியக்கும் பேரழகுகற்பனைக்கெட்டாத வடிவழகுகல்மனம் படைத்தோரும் கைகட்டிகண்ணீர்மல்க வணங்கிட செய்வாள்கலியுலகில் நடப்பதையெல்லாம்கண்காணித்து நலம்புரிவாள் அம்பிகை!அம்பிகையருளால் அறம் நிலைக்கும்நம்பியோருக்கு வரம் கிடைக்கும்தும்பியினம் பருக தேன்சுரக்கும்அம்பிகையே அனைத்துக்கும் ஆதாரம்அருள்மணிப்பார்வை காதோரம்அள்ளிவீசிட செய்வோம் மாதவம்அச்சம் சிறிதுமில்லை வாழ்க்கையில்அமுதக்குடம் நிரப்புவாள் அம்பிகை!
தொகுப்பு: விஷ்ணுதாசன்