உழவுக்கு உதவிடும் ஊர்க்காரி
ஊறும் மண்ணை
பொன்னாக்கும் மனசுக்காரி!உள்ளமதை பக்தியால்
ஆளும் உரிமைக்காரி!எண்ணமதை சீர்தூக்கிஎழுத்தில் வரும் உறவுக்காரிசெல்வம் பதினாறு தந்துசேர்ந்து வாழும் பாசக்காரி!மங்கல பொட்டுக்காரிமத்தாப்பு சிரிப்புக்காரிமஞ்சள் சேலைக்காரிபூங்கரக ஆட்டக்காரிபுதுவளையல் கரத்துக்காரிபூச்சுற்றிய கூந்தல்காரிமதிநுட்ப கண்ணுக்காரிமானமுள்ள காவல்காரி!வஞ்சனை மனப் பேயைகஞ்சன் சேர்த்த பொருளைவிரட்டி அடிக்கும் வேப்பிலைக்காரி!விளைச்சல் தரும் செல்லியம்மன்துணிச்சல் தரும் எல்லம்மன்தீயாய் வருவாள் திரவுபதியம்மன்நோயை தடுப்பாள் பச்சையம்மன்!குளக்கரை முனியம்மாகுலசாமி முனுசாமிமூதாதையர் நம்பிக்கைமுன்னேற்றம் நம் வாழ்வில்!முடிச்சி காசு கட்டிவைச்சுமுயற்சியை தொட்டுவச்சாமுடியாத காரியம் ஒன்றுண்டோமுளைக்கும் சந்ததிக்கு குறையுண்டோ!ஊருக்கு ஒளி விளக்குஉள்ளன்பு ஒளிர மாவிளக்கு!புதுப்பானை புத்தரிசி பொங்கச்சோறுதித்திக்கும் வாழ்வு வெல்லம்சேரு!இலைக்கு நிறமூட்டும் நரம்பாய்கலைக்கு உயிரூட்டும் கன்னியம்மா!ஆடிமாதம் முளைப்பாரி,பால்குடம்அமுதம் பொங்கும் பொன்னியம்மா!நறுமண மலராய் பல்சுவை கனியாய்நடனமாடும் தேவியம்மா!நாலு திசை ஊருக்குநீதான் காவலம்மா!ஊருபோல மனசும்அமைதியா இருக்குதுபேச்சியம்மன் அருளால்பிழைப்பு நடக்குது!
விஷ்ணுதாசன்