மாங்காட்டில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்பு

குன்றத்தூர்: மாங்காடு பிரதான சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மக்கள் நீதிமையம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு கலைக்கூடம் என்ற பிரிவை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து  கராத்தே, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு பயிற்சி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் அவரிடம் வாழ்த்து பெற்றனர். இக்கூட்டத்தில், விபத்தில் உயிரிழந்த முகையூர் ஊராட்சி ஒன்றிய செயலாளர் ஏழுமலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது குடும்பத்திற்கு கர்நாடாக கமல்ஹாசன் ரசிகர் மன்ற சார்பாக ரூ50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு மாவட்ட செயலாளர் கவிஞர் சினேகன் வீரவாள் பரிசளித்தார் . …

The post மாங்காட்டில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: