திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் நேற்று, சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களை, கிரிவலம் வரும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் பக்தர்கள் முக்கியமாக தரிசிக்கும் கோயில்களில் ஒன்று திருநேர் அண்ணாமலையார் கோயில். சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு அன்று இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் மூலவர் மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.