சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்த பகுதியில் குடிமகன்கள் அட்டகாசம்: பயணிகள் அவதி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் குடிமகன்களால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் சில தினங்களுக்கு முன்பு குடிமகனுக்கு போதை தலைக்கேறிய பின்பு ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பேருந்துகாக காத்திருந்த பெண் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பேருந்து நிலையத்தினருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் போதை ஆசாமிகள் மதுகுடித்து விட்டு போதை தலைக்கேறிய பின்பு அரைகுறை ஆடையுடன் ஆபாச வார்த்தைகள் பேசிக்கொண்டு பேருந்து நிலையத்தில் அட்டகாசம் செய்துவருகின்றனர். இதுதொடர்கதையாக நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது .எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள்,காவல்துறையினர் பேருந்து நிறுத்தம் அருகே இயங்கிவரும் டாஸ்மாக் கடையை விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும். அட்டகாசம் செய்யும் குடிமகன்களை ரோந்து காவல்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்….

The post சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்த பகுதியில் குடிமகன்கள் அட்டகாசம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: