ஸ்ரீவைகுண்டம்: நவதிருப்பதி கோயில்களில் 9வது தலமாக மற்றும் குரு தலமாக விளங்ககூடிய ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனி உற்சவ விழா கடந்த மார்ச் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி பொலிந்தநின்றபிரான் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷவாகனம், யானை வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனம், புன்னைமர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகிறது.
5ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விஸ்வரூபம், காலை 7.30 மணிக்கு திருமஞ்சணம், காலை 8மணிக்கு நித்தியல் கோஷ்டி, காலை 8.30 மணிக்கு வீதிஉலா, காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11 மணிக்கு நித்தியல் கோஷ்டியும் நடைபெற்றது.