செங்கம்: செங்கம் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் சிவன் கோயிலில் நந்தி பகவான் பொன் நிறமாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் சிவன் கோயிலில் உள்ளது. இக்கோயிலில் தமிழ் மாத பிறப்பு அன்று காலையில் சிறப்பு பூஜை மற்றும் கோ பூஜை நடைபெறும். ஆரூத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், திருகல்யாணம், சித்திரை வசந்த உற்சவம், திருவூடல், சிவராத்தரி திருவிழா, திருவிளக்கு பூஜை, பிரதோஷ வழிபாடு, குரு பெயர்ச்சி, ராகுகேது பெயர்ச்சி, தட்சணாமுர்த்தி வழிபாடு உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.