வந்தவாசி அருகே மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

வந்தவாசி: வந்தவாசி அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிசக்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் இமயமலை கங்கோத்திரி ஸ்ரீநாராயண தீர்த்த சங்கராச்சாரியார் கலந்து கொண்டார். வந்தவாசி அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிசக்தி மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹாமம், தனபூஜை, கஜபூஜை, லட்சுமி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.  தொடர்ந்து இமயமலை கங்கோத்ரி ஸ்ரீகாளி அம்பாள் பீடம் ஜகத்குரு நாராயண தீர்த்த சங்கராச்சாரியார்  கலந்து கொண்டு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். விழாவில், கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: