சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மார்ச் 18, 19ம் தேதிகளில் நடக்கிறது.இக் கோயில் திருவிழா கடந்த 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா சுற்றுவட்டார கிராமங்களில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. நேற்று வடக்குப்பேட்டை, கடைவீதி பகுதிகளில் திருவீதி உலா நடந்தது.அன்று இரவு வேணுகோபாலசாமி கோயிலை சென்றடைந்தது.