மன்னார்குடி:மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டை மகா மாரியம்மன் கோயில் கும்பா பிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அடுத்த திருமக்கோட்டை மகா மாரி யம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 தினங்கள் மகா மாரியம்மன் கோயிலில் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.