என்னைப் பார்த்து கோபப்பட்ட பிரியதர்ஷன் சார், ‘உங்கள் தலைமுடியில் எண்ணெய் தடவிக் கொண்டு வரச்சொன்னேன். அது உங்களுக்குப் புரியவில்லையா?’ என்று கேட்டார். உடனே நான், ‘ஆமாம், தலைமுடியில் எண்ணெய் தடவியுள்ளேன், பாருங்கள்’ என்றேன். ஆனால், அதற்குப் பிறகு அவர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். எனக்கு எதுவும் புரியவில்லை. பிறகு அவர் எனக்குப் பின்னால் வந்து நின்று, ஒரு பாட்டிலுள்ள எண்ணெய் முழுவதையும் அப்படியே என் தலையில் ஊற்றினார். நான் அதிர்ச்சி அடைந்து நின்றேன்.
உடனே அவர், ‘இதற்கு பெயர்தான், தலைமுடியில் எண்ணெய் வைப்பது என்பது. எனக்கு இந்த லுக்தான் வேண்டும்’ என்றார். அந்த லுக் என்றாலும் கூட, நான் ரெடியாக அதிக நேரமாகவில்லை. உடனே தலைமுடியில் எண்ணெய் தடவிக்கொண்டு, ஜடை போட்டுக்கொண்டு, ஐந்தே நிமிடங்களில் கிராமத்து பெண்ணா நடிப்பதற்கு தயாராகி விட்டேன்.
The post ஒரு பாட்டில் எண்ணெயை தபு தலையில் ஊற்றிய பிரியதர்ஷன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.