பேரையூர்: பேரையூர் அருகே பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோயில் 6 சப்பர பவனி நேற்று நடைபெற்றது. இதில் 7 ஊர்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், பேரையூர், டி.கல்லுப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோயில் 6 சப்பர பவனி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, டி.கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, கே.சத்திரப்பட்டி, கிளாங்குளம், காடனேரி ஆகிய ஆறு ஊர்களில் இருந்து அம்மன் சிலைகளுடன் சப்பரங்களை தலையில் சுமந்து இளைஞர்கள் வி.அம்மாபட்டி வந்து சேர்ந்தனர். அங்கு அம்மன் சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் சப்பரங்களை அவரவர் ஊர்களுக்கு கொண்டு சென்றனர்.