திருச்சி-நாமக்கல் சாலையில் குணசீலம் திருத்தலத்திற்கு அருகில் உள்ள தலம் துடையூர். இங்கு கோயில் கொண்டுள்ளார் விஷமங்களேஸ்வரர். இவருக்கு தினமும் அரிய மூலிகைத் தைலத்தால் அபிஷேகம் நடைபெறும். நரம்பு சம்பந்தமான நோய் மற்றும் வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகத் தைலத்தைப் பிரசாதமாகப் பெற்று பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் விரைவில் குணம் காண்பார்கள் என்று கூறப்படுகிறது.