ஏற்காடு: ஏற்காடு புத்தூர் கிராமத்தில் பெருமாள் மற்றும் ராமர், மணியப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஏற்காடு, கே.புத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட இளையராமர், சேர்வராய பெருமாள், மணியப்பன் கோயில் கும்பாபிஷேக நேற்று நடந்தது. காலை 7 மணியளவில் 4ம் கால யாக பூஜை நிறைவு பெற்று, கலசங்கள் கோபுரத்தில் பொருத்தப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டது.