நாகர்கோவில்: மேல்கரை ஸ்ரீசித்திவினாயகர் கோயில் வருஷாபிஷேகம் மற்றும் ஸ்ரீசுந்தரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. நேற்று மாலை வாஸ்து சாந்தி பூஜையும், வாஸ்து ஹோம பிரவேச பலியும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தீபாராதனை நடந்தது. இன்று காலை 4 மணிக்கு தேவதா அனுஞ்ஞை, எஜமான சங்கல்யம், விக்னேஸ்வர பூஜை, புண்யா ஹாவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, வேதிகா அர்ச்சனை, மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மூர்த்தி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது.