திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று முதல் 10 நாள் பிரமோற்சவ விழா

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரமோற்சவ விழா இன்று தொடங்கி, 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. சித்திரை திருவிழா முதல் நாள் புன்னைமர வாகனத்தில் பார்த்தசாரதி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, சிம்ம வாகனம், யானை வாகனம், ஆனந்த விமானம், குதிரை வாகனம், அனுமந்த வாகனம், சூரிய பிரபை, கண்ணாடி பல்லக்கு, பல்லக்கில் நாச்சியார் திருக்கோலம், விடையாற்றி சாற்றுமுறை, சிறிய தேரில் சுவாமி பவனி வருதல் என தொடர்ந்து சித்திரை 3 முதல் 12ம் தேதி வரை திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி அருள்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று முதல் 10 நாள் பிரமோற்சவ விழா appeared first on Dinakaran.

Related Stories: