பூண்டி வட்டார கல்வி அலுவலகத்தை புதுப்பித்த பிறகும் பணிக்கு செல்ல ஊழியர்கள் மறுப்பது ஏன்?

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பிடிஓ அலுவலக வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வந்தது. இந்த கல்வி அலுவலகம் பாழடைந்த நிலையில் இருந்தது.  இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் கொடுத்தபோது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி தலைவர் சித்ரா ரமேஷ், தனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் முழுவதும் சீரமைத்து வண்ணம் பூசி அனைத்து வசதிகளும் செய்தார். அதற்கு பிறகும், அலுவலகத்துக்கு வர வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஊழியர்கள் மறுக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பிடிஓ அலுவலக வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பூண்டி வட்டார கல்வி அலுவலகத்தை புதுப்பித்த பிறகும் பணிக்கு செல்ல ஊழியர்கள் மறுப்பது ஏன்? appeared first on Dinakaran.

Related Stories: