மேகதாது அணை எதிர்த்து சென்னையில் நாளை இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட குழுக்களின் சார்பில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தியும், மக்களுக்கு பெரும் பாதிப்பு உருவாக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வை கண்டித்தும் வரும் சனிக்கிழமை (26ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வடசென்னை மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மாநில துணைச் செயலாளர்கள் சுப்பராயன் எம்.பி. மு.வீரபாண்டியன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post மேகதாது அணை எதிர்த்து சென்னையில் நாளை இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: