கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு லாரி-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்: 5 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் – சத்தியவேடு வழியாக (தடம் எண்-112) அரசு பேருந்து நேற்று மாதர்பாக்கம் பஜார் வீதிக்கு சென்றது. பின்னர் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மாதர்பாக்கம் – சத்தியவேடு திருப்புமுனை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருப்புமுனையில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மணல் லாரி, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பேருந்தின் முன்பகுதி நொருங்கி சேதமானது. மேலும், லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணி, நடத்துனர் சங்கர், பஸ்சில் பயணம் செய்த சத்தியவேடு பகுதியை சேர்ந்த சுமித்ரா மற்றும் மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்த நாகரத்தினம், குப்பையா உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், லாரியில் பயணம் செய்தவர்கள் காயமின்றி தப்பினர்.இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

The post கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு லாரி-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: