தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் கைது

சென்னை: ராயபுரம் பிச்சாண்டி லைன் தொப்பை தெருவை சேர்ந்த மகசர் அலி (42). இவரது மனைவி பரக்கத் நிஷா (34). கடந்த 14ம் தேதி, மகசர் அலி, மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களது படுக்கை அறையில் மகசர் அலி எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தொழில் மற்றும் சொந்த செலவுக்கு பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி கொடுக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் தொல்லையில் ஈடுபட்டதால், தற்கொலை செய்வதாக எழுதப்பட்டு இருந்தது. மேலும், கடன் கொடுத்தவர்களின் பெயர்களும் அதில் எழுதி இருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக மதுராந்தகத்தை சேர்ந்த பிரசாத் (29), கருங்குழி கார்த்திக் (29) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்….

The post தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: