உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி லண்டனிலும் போர்கொடி!: போரை கைவிடாவிட்டால் விலை கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை..!!

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அந்த நாட்டின் தலைநகர் மாஸ்கோ, பிரிட்டன் தலைநகர் லண்டன் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. போரை நிறுத்த வலியுறுத்தி மாஸ்கோ உள்பட ரஷ்யாவின் 58 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்கோவில் திரண்ட போராட்டக்காரர்கள் போருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி லண்டனிலும் போராட்டம் நடைபெற்றது. போரை ரஷ்யா கைவிடாவிட்டால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர். உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனே நிறுத்தக்கோரி ஈராக்கில் எர்பில் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகம் முன்பு உக்ரேனியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது உக்ரைனுக்கு ஆதரவாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். …

The post உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி லண்டனிலும் போர்கொடி!: போரை கைவிடாவிட்டால் விலை கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: